வாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு
இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு, தேர்தல் ஆணைக்குழுவால், தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில், வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பை அடுத்து, இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என, அச்சகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளுக்கு, சுமார் 15 முதல் 20 நாள்கள் தேவையென, தேசிய அச்சகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மொத்த சனத்தொகையே 30 மில்லியனுக்கும் குறைவு, அதிலும் 116 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்களாம்.....
ReplyDeleteVoters are more than the population
ReplyDelete