Header Ads



மனிதத்தை விதைத்துச் சென்றாயே நீ


தன்னுயிரைத் துச்சமென மதித்தாய்...
தன்தாரம் பிள்ளைகளை மறந்தாய்...
மனிதாபிமானம் உன்னுள் ஓங்கியதால்
மதமேது இனமேது என்று எண்ணவில்லை....
மன்னுயிரைக் காத்திடவே...
சட்டென்று பாய்ந்தாய் நீருனுள்...
அவள் பிழைத்தாள்...
நீயோ மிதந்தே வந்தாய்...
மீளாத் துயரில் உன்குடும்பம்...

இறைவனிடம் நல்சுவனத்திற்காய்
இருபத்தேழாம் நோன்பில்
இருகரங்களையும் ஏந்தியவனாய்...
உன்னை டிஜிட்டலில் செதுக்கி
அழகு பார்க்கின்றேன்....

உனக்கும் எங்கட்கும் உள்ள உறவு
உன் மனிதாபிமானத்தால் 
உன் உணர்வுகளால்
பின்னிப் பிணைந்ததே....

ரிஸ்வான்.....
தேஜுஸான உன்முகம்போல்
மறுமையிலும் நீ உயிர்பெற்றெழ
பிரார்த்தனைகள் சகோதரனே...
உனக்கு உவமை சொல்ல
என்னிடம் வார்த்தைகளே இல்லையடா...

மனிதாபிமானத்தை
மண்ணில் விதைத்துச் சென்றாயடா?
மண் இனியேனும் பாடங்கள் படிக்குமா?
மதத்தைக் கடந்த மனிதம்
மண்ணில் இன்னும் வாழ்கின்றதென்று!

-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்

1 comment:

Powered by Blogger.