நாயிடமிருந்து மீட்கப்பட்ட மான் குட்டி, பொலிஸாரிடம் ஒப்படைப்பு (படங்கள்)
நாயிடமிருந்து காப்பாற்றிய மான் குட்டியை லெட்சுமி தோட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலா லெட்சுமி தோட்ட தேயிலையில் நடமாடிய மான் குட்டியே இன்று -15- மதியம் நாயிடம் சிக்குண்டுள்ளது.
நாயிடம் உயிருக்கு போரடிய நிலையில் மீட்கப்பட்ட மான் குட்டி இரை தேடி தேயிலை மலைப்பகுதியில் திரிந்த போதே ஆபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸாரினால் பொருப்பேற்கப்பட்ட மான் குட்டியை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.
Dear admin please confirm tamil wording and tamil spelling before publishing
ReplyDeleteMany gramatical errors found