Header Ads



கொரோனா தொடர்பான எந்த, தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை


கொரோனா வைரஸ் தொடர்பான எந்த விபரங்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு அதற்கான தேவையுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 தொடர்பான உண்மையான புள்ளிவிபரங்களையும் ஏனைய விபரங்களையும் அரசாங்கம் வெளியிட்டு;ள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தொடர்ந்தும் பொதுமக்களிற்கு உண்மையான தகவல்களை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை ஏப்பிரல் 17 ம் திகதிக்குள் ஒழித்துவிடலாம் என சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார் என எதிர்கட்சிகள் தெரிவித்திருப்பதுகுற்றம்சாட்டியிருப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தள்ள அமைச்சர் நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் மக்களின் கடமைகைளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.