Header Ads



பிரதமர் மகிந்த அழைத்துள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மாட்டோம் - ஹக்கீம்

பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைத்துள்ள பேச்சுவார்த்தையில் தாம் உட்பட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஏற்பாடு செய்துள்ள பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வது தொடர்பாக வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி என்ற வகையில் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. வீரவார்த்தை தான் மதிக்கின்றோம். ஏன் இவ்வளவு வீராப்புடன் பேசுகின்றீர்கள். ஜே.வீ.பி. அவர்கள் கலந்து கொள்ளாத காரணத்தை அழகாக வௌியிடுகின்றார்கள். ஏன் உங்களுக்கும் கலந்து கொள்ள விரும்பாத காரணத்தைக் கூற முடியாது. சொல்லுங்கள், நிச்சியம் உங்களிடம் நியாயமிருந்தால் அந்த நியாயமான காரணத்தால் தான் நாம் கலந்து கொள்வதில்லை என பொதுமக்களுக்கு தெரிவியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.