Header Ads



விசாரணைகளில் இருந்து விலகிக்கொள்ள தயார்...!


ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று (20) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. 

இதன் போது, ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது தற்போதைய சூழ்நிலையில் நடைமுறையில் சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. 

தேர்தல் ஆணைக்குழு சார்பாக நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவிப்பை மேற்கொண்டிருந்தார். 

சுகாதார அமைச்சினால் நாட்டில் பொதுத் தேர்தலை நடத்தக் கூடிய சாதகமான சூழல் குறித்து அறிவிக்கும் வரை தேர்தலை நடத்த முடியாது என்று அவர் இதன் போது தெரிவித்திருந்தார். 

குறித்த அறிவிப்பின் பின் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தனது கட்சிக்காரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் குறித்த மனு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்த படாது என நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

2

விசாரணைகளில் இருந்து விலகிக்கொள்ள தயார்...!

நாட்டில் தற்பொழுது காணப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலை காரணமாக பொது தேர்தலை நடத்த முடியாது என ஜனாதிபதி வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து வழக்கறிஞர் சரித குணரத்ன தாக்கல் செய்த மனு மீதான விவாதத்தில் இருந்து விலகிக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் மனு மூலம் தாக்கல் செய்த விடயம் தற்பொழுது நீதிமன்றில் ஜனாதிபதி வழக்கறிஞரால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு தாம் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக சரித குணரத்ன சார்பில் நீதிமன்றில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை சவாலுக்குள்ளாக்கிய மனு மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

No comments

Powered by Blogger.