Header Ads



யாரப்பே... நீயெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாய்...!



(கலைமகன் பைரூஸ்)

மூள
கெட்ட முண்டங்கள்...
சாம்பலாக்கிவிட்டு,
சாம்பலில் கொரோனா இல்லெயன்கிறான்கள் இப்போ...
எரித்த சாம்பரை
இவன்களுக்கு
உயிர்ப்பிக்க ஏலுமா?
மடச் சாம்பிராணிங்க...
ஏண்ட வாப்பாட மையத்தேம்
இழுத்தடிச்சானுகள்
சந்தோசமாய்...
நான் பிடியாய் நின்று
காட்டின ஆதரங்களால
ஒரு கீறலும் இல்லாம
ஒரு நாள் கழிச்சி
வாப்பாட மையத்து கெடச்சது...
துவேசம் பிடிச்சவனுகள்..
இப்போ வந்தி கொடுப்பானுவளோ தெரியா?
சூடுசொரன இல்லாத நம்மாளுக
இவனுவள நம்பி பெரிசா....?
மெளத்தான மையத்த
அடக்கவுடாம இடைநிறுத்துறதும்
அவனுவள்ட ஆசைய நிறைவேற்றத்தான்...
யாரப்பே...
நீயெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாய்...
பார்த்துக் கொடு.. சரியாய்க் கொடு
அபாபீல்களைக் கொண்டு!


1 comment:

  1. அல்லாஹ் மிகப்பெரியவன்.
    ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் துஆ வீண் போகாது.
    இந்த சதிகாரர்கள் அதற்கான பிரதி பலனை விரைவில் கண்டு கொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.