Header Ads



ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மரண செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த கால்விமான்களில் ஒருவரும்,  பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளருமான கலாநிதி எம்.ஏ.எம்.சக்ரி அவர்கள் இன்று (19.05.2020) வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.

தனது வாழ்நாளை கல்வி மற்றும் தீன் பணிக்காக செலவழித்த இவர்கள் அகில  இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோடு நல்லுறவோடு இருந்து வந்தார்கள். தேவையான போது நல்லாலோசனைகளையும் தருவதில் பின் நிற்கவில்லை. உலமா சபை நடாத்திய பல மாநாடுகள், கருத்தரங்குகளில் பங்கு கொண்டு ஆய்வுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்கள்.

பன்னூல் ஆசிரியரான இவர்கள் இலங்கையின் பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்கள். பல்லாயிரம் மாணவர்களின் ஆசிரியராக திகழ்ந்த இவர்கள் நடுநிலையான போக்கோடும், உலமாக்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்போடும் இருந்து வந்தார்கள்.

ஜாமிஆ நளீமிய்யாவுடன் பிணைந்து செயற்பட்ட இவர்கள் இறுதி வரை கல்விப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார்கள். இதன் விளைவாக பல கல்விமான்களை இப்பூமியில் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.

வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.