Header Ads



ஜனாதிபதியின் தலைமையின் கீழ் எந்த சக்திக்கும் தேசிய பாதுகாப்புக்கு, அச்சுறுத்தலை ஏற்படுத்த இடளிக்க போவதில்லை

பாரிய அர்ப்பணிப்பை செய்து பெற்றுக்கொண்ட அமைதியை சீர்குலைக்க எந்த சக்திக்கு அரசாங்கம் இடமளிக்காது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ் எந்த சக்திக்கும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இடளிக்க போவதில்லை.

தேசத்திற்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் என 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமது உயிரை தியாகம் செய்தனர் எனவும் கமல் குணரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.