Header Ads



தீவிர இனவாதக் கருத்துக்களை உமிழ்பவர்கள் கூட, ரிஸ்வானுக்காக கவிதை வடிக்கிறார்கள்.


Mohamed Ali Yaseer Arafath

ஷஹீதான உறவு ஹமீத் ரிஸ்வானின் தியாகம் பலதரப்பட்ட மக்களின் உள்ளங்களை தாக்கிவிட்டது. தீவிர இனவாதக் கருத்துக்களை உமிழ்பவர்கள் கூட அவருக்காக கவிதை வடிக்கிறார்கள்.

தீவிரவாத சஹ்ரானிகளும், சமூக வங்கரோத்தினை உருவாக்கிய சுயபோஷண அரசியல்பேதிகளும் ( I stress again பேதிகள்) உருவாக்கும் நச்சுமூலங்களை சில முத்தலிப்களையும், மொஹிதீன்களையும், ரிஸ்வான்களையும் வைத்து நடுநிலையாக்க இறைவன் போதுமானவன். எதுவும் இங்கே நிரந்தரமில்லை.

இனமத பேதமின்றி மனிதநேயத்துடன் உயிரை துச்சமாக மதித்து மற்றவர்களுக்கு உதவி புரியும் ரிஸ்வான்கள் எல்லா மதத்திலும் உள்ளார்கள் அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். இவ்வாறானவர்கள் இழப்பில் வாழும் இவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக நாம் இணைந்து ஒரு நிதியத்தை உருவாக்க முன்வரவேண்டும். எம்மால் இயன்ற வரை முறையான வழிகளில் தனிப்பட்ட உதவிகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு நகரிங்களிலும் கிராமங்களிலும் குறிப்பாக நீர்நிலைகள் உள்ள பிரதேசங்களில் சமூகமட்ட உயிர்காப்பு பயிற்சி பெற்றோரை உருவாக்க வேண்டும்.

பல உயிர்களை காப்பாற்றலாம் அல்லது உயிர்களை காப்பாற்ற நினைக்கும் நல்ல பல உயிர்களும் காப்பாற்றப்படலாம்.

2 comments:

  1. ரிஸ்வான் அவர்களின் மேன்மையையும் பரந்துபட்ட மனிதபிமானத்தையும் தியாகத்தையும் பணிந்து அஞ்சலிக்கிறேன்.

    ReplyDelete
  2. தன்னை இழந்து, தனது சமூகம் மனசாட்சியுள்ளது,தியாகசிந்தை கொண்டது என்ற வரலாற்றுப் பதிவொன்றினை விட்டுச் சென்றுள்ளார். அவரது சமூகம் அவர் தொடர்பாக கடமைப்பட்டுள்ளது என்பது மறுக்கப்படமுடியாதது.

    ReplyDelete

Powered by Blogger.