Header Ads



பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயினில் குறையும் தினசரி உயிரிழப்புகள் - தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பல வாரங்களாக கொரோனோ வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் தினசரி எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்துள்ளன.

பிரான்ஸில் 135 பேர் உயிரிழந்துள்ளனர்; ஸ்பெயினில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்; இத்தாலியில் 174 பேர் உயிரிழந்துள்ளனர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. அந்த நாட்டில் புதிதாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ரஷ்யாவில் இதுவரை 1280 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் புதிதாக 315 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக பிரிட்டனில்தான் கொரோனா தொற்றால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.இருப்பினும் பிரிட்டனில் கொரோனா தொற்று உச்சநிலையைக் கடந்துவிட்டது என்றும், புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

BBC

No comments

Powered by Blogger.