Header Ads



அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயமாக எதிர்வரும் 6 மாதங்களுக்கு பின்பற்ற வேண்டும்

அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயமாக எதிர்வரும் 6 மாதங்களுக்கு பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் அனுஷாந்தன் இதை தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவ்வாறு கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டால் இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டாலும் அதனை கட்டுபடுத்த முடியும் எனவும் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் அனுஷாந்தன் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.