Header Ads



533 பேர், இன்று வீடுகளுக்குத் திரும்பினர்


இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து, தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 533 பேர்  இன்று வீடுகளுக்குத்  திரும்பியுள்ளனர்.

இதற்கமைய புணானை மத்திய நிலையத்திலிருந்து 75 பேர்  கந்தகாடு முகாமிலிருந்து 62 பேர், விடத்தபலை முகாமிலிருந்து 298 பேர், தியத்தலாவை, பூஸா மற்றும் டொல்பின் ஹோட்டல் ஆகிய இடங்களிலிருந்து 98 பேர் என மொத்தமாக 533 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அத்துடன், மேலும் 4428 பேர் 39 தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.