அபாபில் எனப்படும் உதவும் கரங்கள் குழுமம், குறுகிய காலத்தில் 5000 குடும்பங்களுக்கு உதவி புரிந்து சாதனை
இலங்கையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட, அபாபில் எனப்படும் உதவும் கரங்கள் அமைப்பு, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி புரிந்து சாதனை படைத்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல், தொடர் ஊரடங்குச் சட்டம், நகரங்கள் முடக்கப்பட்டமை, கடைகள் மூடப்பட்டமை, தொழில் இன்மை, வருமானம் பாதிப்படைந்தமை ஆகியவற்றால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டனர்.
இவ்வாறான நிலையில் உருவாக்கப்பட்டதே, அபாபில் எனப்படும் உதவும் கரங்களாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சகோதர சகோதரிகளின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுமம் புத்தளம், யாழ்ப்பாணம், பாணந்துறை பகுதிகளில் வாழும் மூவின வறிய மக்களுக்கும், உலமாக்களுக்கும், வலதுகுறைந்தவர்களுக்கும், சிறுவர்களுக்கும் உதவி வருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக உலமாக்களுக்கும், முஅத்தீன்களுக்கும் நிதியுதவி வழங்கும் திட்டம் புத்தளத்தில் நடைபெற்றது. இதன்போது மூவின சமய குருக்களும் பங்கேற்றனர்.
உங்கள் உதவிகளை செய்ய விரும்பினால், கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்
அமீன் - 0094 775551306, ரமலான் - 0033 652164159
Masaha Allah...
ReplyDeleteUngal முயற்சிக்கு பாராட்டுகள்.....
இது போன்ற சேவைகள் மூலம் இன்னும் இன்னும் உதவிகள் கிடைபதுக்கு பிரார்த்திக்கிறோம்....