Header Ads



கிண்ணியாவில் சுவர் இடிந்து விழுந்ததில், 4 வயதுச் சிறுவன் வபாத்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

திருகோணமலை,  கிண்ணியா பொலிஸ் பிரிவு மாஞ்சோலைச் சேனை பகுதியில் வீடொன்று கட்டிட வேலைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த போது வீடொன்று சரிந்து விழுந்ததில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்து சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு சிறுவன் படுகாயமடைந்தார்.

இப் பரிதாப சம்பவம் கிண்ணியா -03 மாஞ்சோலைச் சேனை , ஆலீம் வீதி , இன்று (10) காலை 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் ரணீஷ் - முஹம்மது-ஷான்  கனி வயது -04) எனும் மாணவரே  உயிரிழந்தவராவர் .

இவரது சகோதரான  ரணீஸ் முஹம்மது - தாஜ் ( வயது-02) எனும் சிறுவன் படு காயமடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை  மேற்கொண்ட  கிண்ணியா மரண விசாரணை  அதிகாரி  கே.ரீ.நிஹ்மத்துல்லா  
வீட்டுச் சுவர் இடித்து விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இடம் பெற்ற விபத்து மரணம் எனத் தீர்ப்பு வழங்கினார்.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகளை கிண்ணியா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.