Header Ads



சென்னையில் இருந்து நாளை 479 பேர் இலங்கை அழைத்து வரப்பட உள்ளனர்

இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் சேவையின் விமானம் மூலம் நாளைய தினம் 479 பேர் இலங்கை அழைத்து வரப்பட உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -11- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இராணுவம் பராமரித்து வரும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 3 ஆயிரத்து 805 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து கடற்படையினர் விலகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை. அவர்கள் தொடர்ந்தும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.