Header Ads



குவைத்திலிருந்து 448 இலங்கையர்கள் நாட்டிற்கு வரவுள்ளனர்

குவைட் நாட்டிற்கு தொழில்வாய்ப்பிற்காக சென்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிய 448 இலங்கையர்கள் நாட்டிற்கு வரவுள்ளனர்.

இவர்கள் நாளைய தினம் நாட்டிற்கு வரவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைட்டிலுள்ள இலங்கை தூதகரகம் வாயிலாக இவர்கள் அந்நாட்டின் இருவிமானங்கள் மூலம் தாயகம் திரும்பவுள்ளனர்.

குவைட் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தினை தொடர்ந்து வீசா இன்றி தங்கியிருந்த 383 பேர் இவர்களில் உள்ளடங்குவதோடு, 65 பேர் முகாம்களில் தங்கியிருந்தவர்க்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் நாடு திரும்பவுள்ள இவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.