கொழும்பில் யாசகம் பெற்று வந்தவர்களின் 2 சடலங்களை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்; உயிரிழந்த இரண்டு வயோதிபர்களின் சடலங்களை பொறுப்பேற்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பில் யாசகம் பெற்று வந்தவர்கள் என்றும் இவர்களின் சடலங்களை பொறுப்கேற்க எவரும் முன்வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இருவரின் மாதிரிகள் பி.சி.ஆர் பாரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளதுடன், முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.
Post a Comment