Header Ads



முல்லைத்தீவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில், உயிரிழந்த 2 பேரும் வயோதிபத்தினாலே உயிரிழப்பு

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த இருவர் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் சுகயீனமுற்ற நிலையில் நேற்று உயிரிழந்த குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் சவேந்திர சில்வா சிங்கள வானொலிக்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இருவரும் பல்வேறு நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தவர்கள்.

மருத்துவ பரிசோதனையில் இருவரும் முதுமையின் காரணமாக ஏற்பட்ட பொதுவான நோய்களால் இறந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.