Header Ads



வஸ்கமுவ தேசிய பூங்காவில், கத்திகளுடன் தங்கியிருந்த பிக்கு உட்பட 28 பேர் கைது

அனுமதியின்றி வஸ்கமுவ தேசிய பூங்காவில் தங்கியிருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு பிக்கு உட்பட மொத்தமாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வஸ்கமுவ தேசிய பூங்காவின் நாகநாகலா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து பல கத்திகளும் உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அவர்களை பொலனறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.