Header Ads



பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொவிட் 19 தொற்று நோய் காரணமாக பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் டாக்கா விமான நிலையத்திலிருந்து இன்று (24) அதிகாலை 1.50 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர். 

இவர்கள் யூ.எல் - 1423 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டன. 

பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் அவர்கள் இராணுவத்தின் உதவியுடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.