Header Ads



ஜாகீர் நாயக்கின் தொலைக்காட்சிக்கு 2.75 கோடி அபராதம்


பிரித்தானியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதாக சர்ச்சைக்குரிய  ஜாகீர் நாயக்கிற்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலுக்கு 2.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின், ஊடகங்களை கண்காணிக்கும் அமைப்பான ஆப்காம், வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டி விடுவதற்கான உரையை ஒளிபரப்பியதற்காக அமைதி (Peace Tv) உருது மொழி சேனலுக்கு 2 லட்சம் பவுண்டும், அமைதி சேனலுக்கு 1 லட்சம் பவுண்டும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆப்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி தொலைக்காட்சி உருது மற்றும் அமைதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் மிகவும் புண்படுத்தும் உள்ளடக்கம் இருப்பதை எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது. இது ஒரு சந்தர்ப்பத்தில் குற்றத்தைத் தூண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.