அவுஸ்திரேலியாவில் இருந்து 272 பேர் நாடு திரும்பினர் - அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வருகைதர முடியாமல், அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 மாணவர்கள் இன்று(10)காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரிலிருந்து, யு.எல் 605 என்ற இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இவர்கள் காலை 6.00 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வந்தடைந்த அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Post a Comment