நேற்று கொரோனா தொற்றாளர்களாக, இனங்காணப்பட்ட 26 பேர் குறித்த விபரம்
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (13) இனங்காணப்பட்ட 26 பேரும் வெலிசர கடற்படை முகாமைச் சேந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை இனங்காணப்பட்ட 915 தொற்றாளர்களில் 498 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 150 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
Post a Comment