கொரோனா தொற்றாளர்களாக நேற்று இனங்காணப்பட்ட 25 பேர் பற்றிய தகவல் இது
கொரோனா தொற்றாளர்களாக நேற்று (01) இனங்காணப்பட்ட 25 பேரில் 18 பேர், வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினருடன் நெருங்கிப் பழகிய 5 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதுவரை கடற்படையைச் சேர்ந்த 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment