Header Ads



ரமலான் பண்டிகைக்கு 24 மணிநேர ஊரடங்கு: சவுதி அரேபியா அரசு முடிவு

சவுதி அரேபியாவில் ரமலான் பண்டிகைவிடுமுறையின் போது 24 மணிநேர ஊரடங்கை அமுல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் கடும்சரிவை சந்தித்துள்ள நிலையில், அரசின் செலவினங்களை குறைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரமலான் பண்டிகையின் போது 24மணிநேர ஊரடங்கை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சவுதியில் ரமலான் விடுமுறையான மே 23 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரை 24 மணி நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் விடுமுறை முடியும்வரை அமலில் இருக்கும்.

ரமலானுக்கு முந்தைய நாள் வரை காலை 9 மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.