ஜூன் 20 நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை
ஜூன் 20ம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று பெபரல் என்ற சுதந்திர மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இயக்கத்தின் அழைப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
மார்ச் 12 என்ற இயக்கத்திலும் அங்கம் வகிக்கும் அவர் தேர்தல் மீண்டும் ஒருமுறை பின்தள்ளி வைக்கப்படும் வாய்ப்பே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாரிய சிரமம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கொரோனாகுறும்பரவலுக்கு மத்தியிலும் காலந்தாழ்த்தியாவது தேர்தலை நடத்தவேண்டிய அவசியம் உள்ளதாக ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவை எடுப்பதற்காக அரசியல் கட்சிகள் யதார்த்தமான தீர்வு ஒன்றைக் காண முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்திக்கவுள்ளதாகவும் ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
Post a Comment