Header Ads



ஜூன் 20 இல் தேர்தலை நடத்த முடியாது - உயர்நீதிமன்றில் அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு

நாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில்  ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாதென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இதேவேளை, 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும்  வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது விடயங்களை தெளிவுபடுத்தி வாதங்களை முன்வைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறித்த திகதியில் தேர்தலை நடாத்த முடியாதென நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.

இதன் போதே நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது உசிதமானதல்லவெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

 ஜூலை மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று 3 ஆவது நாளாக உயர்நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.