Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளான 172 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும்  10 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி தற்போது வரை 172 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதேவேளை,  இதுவரை 690 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். 

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 511 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.