Header Ads



டுபாயிலிருந்து இலங்கை வந்த 15 பேருக்கு கொரோனா - தொற்றாளர் எண்ணிக்கை 1045 ஆகியது

தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த 15 பேரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1045 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

இவர்களில் 604 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 432 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.