கட்டுப்பாட்டுக்குள் கொரோனா, இருப்பினும் 100 வீதமாக தெரிவிக்க முடியாது - Dr அனில்
மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக,, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் பல்வேறு அனர்த்த குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், நிலைமை 100 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்க முடியாது. இந்த கட்டுப்பாடு எமது கையிலிருந்து நழுவிச் செல்லவில்லை என்பதுடன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் சில காலம் செல்லும் வரை, சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment