Header Ads



உணவுகள் மூலமாக கொரோனா பரவக்கூடும் என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை - Dr நூர் இஷாம்

கொரோனா கிருமித் தொற்று உணவுகள் மூலமாகவும் பரவக்கூடும் என்பதற்கு எந்தவித சான்றுகளும் இல்லை என மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷாம் தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற தகவல்களைப் பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் இணையம் வழி உணவு வகைகளை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் இயங்குகின்றன. இந்நிலையில் உணவக ஊழியர்கள் சிலருக்குக் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. எனவே, அந்த ஊழியர்கள் மூலம் கிருமித் தொற்று பரவும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் அச்சம் நிலவுகிறது.


இந்நிலையில் உணவுகள் மூலம் கோவிட் 19 நோய்த்தொற்று பரவும் என்பதற்கு அறிவியல் பூர்வமான, மருத்துவ ரீதியிலான சான்றுகள் ஏதும் இல்லை என டாக்டர் நூர் இஷாம் தெளிவுபடுத்தி உள்ளார்.

அதேபோல் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசங்கள் அணியவேண்டுமா என்பது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாகவும் அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.