முஸ்லிம் சமூகம் விரைந்து உதவுமா..? அட்டுளுகமயில் மனிதாபிமான நெருக்கடி
களுத்துறை மாவட்டம் - அட்டுளுகம பகுதியில் பாரிய மனிதாபிமான நெருக்கடி நிலவுவதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்ரப், இதுகுறித்து தமது மன வேதனையை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அதாவது கடந்த மார்ச் 26 ஆம் திகதியிலிருந்து, அட்டுளுகம மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பனடோல், சிறுவர் பால்மா, பிஸ்கட் போன்றவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன், சிறுவர்கள் பசியால் அழுகிறார்கள்.
எனவே எங்களுக்கு உடனடியாக எந்த வழியிலேனும் அத்தியாவசியப் பொருட்களை தந்து உதவுமாறு அஸ்ரப் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
தாம் இதுகுறித்து ஜனாதிபதி செயலகத்திற்கு தொலைபேசி மூலம், முறையிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் அந்த பிரதேசத்தை மூடி வைத்தால் அவர்களுக்கு தேவையான உணவுகளை பொலிசார் மூலமாக வழங்க வேண்டும்.இல்லாவிட்டால் அடுத்த பிரதேசங்கலை போல் அவர்களையும் சில மணித்தியாலங்களுக்கு திறந்து விட வேண்டும்.இது ஒரு மனிதாபிமான பிரச்சினை இதை வைத்து இனவாத அரசியல் பன்னக்கூடாது.மனித உயிர்களின் பசியோடு விழையாடக் கூடாது.சிறுவர்களும் உள்ளனர் என்பதை அரசும் கடந்த தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாக இருந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDelete