Header Ads



இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இணங்கின

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்பட இணங்கியுள்ளன.

இதன் அடிப்படையில் இன்று -29- அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் சீன் அன்வின் ஆகியோர் இலங்கையின் இராணுவத்தளபதியிடம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.

இலங்கையில் இயங்கும் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட சுமார் 10ஆயிரம் ஆடைகள் மற்றும் 2 இலட்சம் கையுறைகள் இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக இதன்போது வழங்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.