Header Ads



முகக்கவசம் அணியாத விற்பனையாளர்களுக்கு, எதிராக வழக்குத் தாக்கல்

மஹியங்கனை பகுதியில், முகக்கவசம் அணியாது பொருள் விற்பனையில் ஈடுபட்ட விற்பனையாளர்களுக்கு எதிராக, மஹியங்கனை சுகாதார பரிசோதகர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட சுகாதார பரிசோதகர்கள், மஹியங்கனை நகரில் நேற்று (28) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, முகக்கவசம் அணியாத ஐந்து வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை காலாவதியான பொருள்களை விற்பனை செய்த 6 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.