Header Ads



கல்முனை பொலிஸ் நிலைய, பொறுப்பதிகாரியின் புதல்வியின் முன்மாதிரி


கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பெரேராவின் புதல்வியின் பிறந்த நாள் நேற்றாகும் 11.04.2020. பிறந்த நாளை தனது தாய் தந்தையுடன் பொறுப்பதிகாரியின் விடுதியில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பொறுப்பதிகாரியின் புதல்வியுடைய ஆசையோ வேறுவிதமாக இருந்தது. தனது பிறந்த நாளுக்கு செலவு செய்யும் பணத்தை ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் இருக்கும் ஏழை குடும்பங்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்பதாகும் .

அவரது ஆசையை நிராகரிக்காத அவரது பெற்றோர்களான கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பெரேராவும் ,அவரது தாயும் மகளின் ஆசையை நிறைவேற்றி வைத்தனர். அதன் பிரகாரம் அவரது பிறந்தநாள் பரிசாக உலருணவு அடங்கிய பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

Aslam Dx 



4 comments:

  1. தந்தையின் குணநலன்கள்தானே மகளுக்கும் அமைந்து இருக்கும். அது என்ன பிரமாதம்.

    ReplyDelete
  2. Wish you happy birthday

    ReplyDelete

Powered by Blogger.