பொரிஸ் ஜோன்சன் விரைவாக குணமடைய, எங்கள் பிரார்த்தனை தொடரும்
செயின்ட் தோமஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று மாலை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இன் நிலையில் விரைவில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டுவர பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
பொரிஸ் ஜோன்சன் விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்கள். இந்த நெருக்கடியான காலத்திலும் உங்களுக்கும் பிரித்தானிய மக்களுக்குமான எங்கள் பிரார்த்தனை தொடரும் என பதிவிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார்.
ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
Ulhattulls,illa,anivarukmnangelum,porest,prdmrukum,prttkkirom
ReplyDelete