Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் நடவடிக்கை - கரு பாராட்டு

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்க சுகாதார சேவைகள், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும் எனவும் அவர்கள் பாராட்டத்தக்க சேவையை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கீழ் மட்டத்தில் ஏற்பட்டு வரும் புதிய யாதார்த்தத்திற்கு அமைய குரல் கொடுக்க தவறினால், அதன் மூலம் நாட்டின் பொது சுகாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதுடன் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் தவிர்க்க முடியாது எனவும் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.