Header Ads



கொரோனா தொடர்பில் பொய்யான தகவலை வெளியிட்ட பெண் கைது

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பிரசாரப்படுத்திய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பெண் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பணிப்பாளராக கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் அது சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இதனடிப்படையில், முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை வெளியிட்ட சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.