ஊரடங்கு வேளையிலும், வீடு புகுந்து கொள்ளை
ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி மண்டுவில் பிரதேசத்தில் இன்று -10- அதிகாலை 2மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த வயோதிபர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிகாரிகளிடம் விசாரணைகள் சாவகச்சேரி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பிரதீபன்-
Post a Comment