Header Ads



ஊரடங்கு வேளையிலும், வீடு புகுந்து கொள்ளை

ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட  சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி மண்டுவில் பிரதேசத்தில் இன்று -10- அதிகாலை 2மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 

வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர். 

படுகாயமடைந்த வயோதிபர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிகாரிகளிடம் விசாரணைகள் சாவகச்சேரி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

-பிரதீபன்-

No comments

Powered by Blogger.