Header Ads



பொலிசாருக்கு ஒத்துழைப்பு நல்குவோம் - இல்லாவிட்டால் இன்றுமுதல் கடும் நடவடிக்கை

மாவட்டங்களுக்கு இடையில் அனுமதியின்றி பயணிக்கும் நபர்களுக்கு எதிரான இன்று (10) முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான நபர்கள் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.