ஆப்கான் ஜனாதிபதி மாளிகையில், பலரிற்கு கொரோனா - ஜனாதிபதி தன்னை சுயதனிமைப்படுத்தினார்
ஆப்கான் ஜனாதிபதி மாளிகையில் பலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி அஸ்ரவ் கானி தன்னை சுய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தியுள்ளார் என பிபிசி தெரிவித்துள்ளது.
ஆப்கான் ஜனாதிபதி மாளிகையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானின் ஜனாதிபதி மாளிகையில் 20ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனினும் பதட்ட நிலையை ஏற்படுத்துவதற்கான தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை என ஆப்கானிஸ்தான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரசினால் 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,33 பேர் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment