Header Ads



சொந்த குழந்தைகளை கொலை செய்த இலங்கை தமிழர் மருத்துவமனையில் கைது

தன் குழந்தைகள் இருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழர் மருத்துவமனையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனின் இல்ஃபோர்ட் பகுதியில் வாழ்ந்து வந்த நிதின்குமார் (40) என்ற இலங்கைத்தமிழர், ஞாயிற்றுக்கிழமை மதியம் தன் குழந்தைகளான பத்தொன்பது மாதக் குழந்தை பவின்யா மற்றும் மூன்று வயது நிகிஷ் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

பவின்யா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிகிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், குழந்தைகளின் தந்தையான நிதின் குமார், குழந்தைகளை குத்திய அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.

அவரையும் பொலிசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், தனது காயங்களிலிருந்து நிதின் குமார் குணமடைந்து வரும் நிலையில், நேற்று பொலிசார் தன் குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ளனர்.

மருத்துவமனையிலேயே அவர் பொலிசாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரியான Vicky Tunstall கூறும்போது, ஒன்றும் அறியாத இந்த குழந்தைகளின் முடிவு மிகவும் வருத்தமளிக்கக்கூடியது என்று கூறியுள்ளதோடு, எதனால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை அறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த குற்றச்செயலின் தாக்கம் உள்ளூர் மக்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், பொலிசார் இந்த உயிரிழப்புகள் தொடர்பாக யாரையும் தேடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, மக்கள் யாரும் அஞ்சவேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அவர்.

விசாரணைக்கு உதவும் தகவல்கள் ஏதாவது யாருக்காவது தெரியுமானால் பொலிசாரை அணுகலாம் என்றும் கூறியுள்ளார் அவர்.

ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் தேடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.