Header Ads



மக்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி - இராணுவ தளபதி

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இலங்கை மக்களின் பெரும்பாலானவர்கள் மிகப் பெரியளவில் ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை மக்கள் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றனர்.

மிகப் பெரிய அர்ப்பணிகளை செய்து, பல கஷ்டங்களை தாங்கி கொண்டு மக்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் இராணுவ தளபதி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இலங்கை மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் இருக்கின்றது.

இந்த கௌரவமும் அர்ப்பணிப்பு மக்களுக்கும் உரித்ததாக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Dear Sir.Sri lankan army, Police, and other forces has done every good team work for all our nations. Day and night you are all with out worrying your family. Work for all sri lankan family .it is very greatfull to saying.good Luke to our sri lanka.good luck to all our great forces.

    ReplyDelete

Powered by Blogger.