Header Ads



தாராபுரம் முழுமையாக விடுவிக்கப்பட்டது


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த 8 ஆம் திகதி அதிகாலை முதல் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் குறித்த கிராமம் நேற்று திங்கட்கிழமைமாலை 3 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கிராமத்தில் இரண்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களிடம் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு எவ்வித தொற்றும் இல்லை என அறிக்கை வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த தாராபுரம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்த நிலையில் குறித்த கிராமம் நேற்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.