Header Ads



அமெரிக்க விமானம்தாங்கி போர், கப்பலில் கொரோனாவுக்கு முதல் பலி


உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 22 ஆயிரம் பேர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலில் பணிபுரிந்து வரும் மாலுமிகளுக்கும் வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனால் 4 ஆயிரத்து 800 மாலுமிகளை கொண்ட அந்த போர்கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே உள்ள குவாம் தீவின் ஆப்ரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, போர்கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் சுமார் 600 மாலுமிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அணுசக்தி மூலம் இயங்கும் அந்த கப்பலில் மாலுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோதே கப்பலின் தலைமை அதிகாரி பிரட் குரோஷியர் அமெரிக்க கடற்படையின் தலைமை செயலாளர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி மற்றும் பாதுகாப்பு செயளாலர் மார்க் எஸ்பெர்க் ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்த கடிதம் எழுதினார். 

இந்த கடித விவரங்கள் எப்படியோ அமெரிக்க ஊடகங்களின் கைகளுக்கு சென்ற விஸ்வ ரூபம் எடுத்தது. 

இதையடுத்து கடற்படையில் கட்டுப்பாட்டை மீறுதாகவும், அரசை அவமதித்ததாகவும், தேவையில்லாமல் பீதியை ஏற்படுத்தியதாகவும் கூறி யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலின் கேப்டன் பிரட் குரோஷியரை அமெரிக்க கடற்படை செயலாளர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி பதவி நீக்கம் செய்தார். 

இந்த பதவி நீக்கம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, குரோஷியை பதவி நீக்கம் செய்த கடற்படை செயலாளர் தாமஸ் மோட்லி கடந்த 6-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாலுமி ஒருவர் நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த மாலுமிக்கு கடந்த 30-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அவர் குவாம் தீவில் உள்ள கடற்படைக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாலுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இது யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் ராணுவ விமானம் தாங்கி போர் கப்பலில் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும்.  

No comments

Powered by Blogger.