ஜனாதிபதியும், முப்படையினரும் கொரோனாவை கட்டுப்படுத்த வெற்றிகரமாக செயற்படுகின்றனர்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வரும் சந்தர்ப்பத்தில் சிலர் தேர்தல் ஒன்றை நடத்த தயாராகி வருவதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடத்த அவசரப்படக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி, முப்படையினர், சுகாதார பிரிவினர் இணைந்து கொரோனா வைரஸ் பரவலை படிப்படியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய இடமளிக்க வேண்டும்.
வைரஸ் பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் எல்லே குணவங்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையில், தேர்தலை நடத்தினால், அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தேரர் எச்சரித்துள்ளார்.
Post a Comment