ஜாஎல பகுதியில் அத்துமீறி நுழைந்த, கொரோனா தொற்றாளர் மீது தாக்குதல்
ஜாஎல - தேலதுர பகுதியில் உள்ள தனியார் இடம் ஒன்றில் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பிரதேச மக்கள் அவரை பமுனுவ காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து அவர் சிகிச்சைகளுக்காக றாகம போதானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் செல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அவர் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Post a Comment