தப்லீக் ஜமாஅத் சகோதரர்களின், நெகிழ வைக்கும் அறிவிப்பு - வீடியோ
கொரோனாவை பரப்பியதாக அவதூறு சொல்லப்பட்ட தப்லீக் ஜமாஅத்தினர்தான் தற்போது கொரோனாவிற்கான ஒரே மருந்து! - ப்ளாஸ்மா சிகிச்சையால் நிகழ்ந்த அற்புதம்!
கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க ப்ளாஸ்மா தானம் செய்ய நாங்கள் தயார்: -கொரொனா நோயிலிருந்து குணம் பெற்ற தப்லீக் ஜமாஅத் சகோதரர்களின் நெகிழ வைக்கும் அறிவிப்பு!
கொரோனா பாதிக்கப்பட்டதாக தப்லிக் ஜமாஅத்தினர் பலரை தமிழக அரசு ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தியது. அவர்களில் பெரும்பாலனவர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பூரண குணமடைந்தனர்.
இந்நிலையில் கொரோனா தாக்கி அதிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் இரத்தத்தில் உள்ள ப்ளாஸ்மாவை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தினால் அவர்கள் பூரண நலம் பெறுவர் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்தனர்.
கேரளாவை அடுத்து தமிழக அரசும் இந்த முறை சிகிச்சைக்கான அனுமதியை பெற்றது. அந்த அடிப்படையில் இப்போது தப்லீக் ஜமாஅத்தினரின் பளாஸ்மா தான் கொரோனா நோயாளிகளுக்கான ஊக்கம் தரும் ஒரே மருந்து.
தப்லீக் ஜமாஅத்தினரின் ப்ளாஸ்மா அதிக அளவில் தற்போது தேவைப்படுகிறது.
யாரை மோசமானவர்களாக மக்கள் பார்த்து வெறுத்து ஒதுக்கினார்களோ அவர்களது இரத்தத்தைத் தான் இப்போது மருந்தே இல்லாத கொரோனாவிற்கு மருந்தாக இறைவன் ஆக்கியுள்ளான்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட தப்லீக் சகோதரரின் பேச்சு நம் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது.
”இறைவனின் அருளால் கொரோனாவிலிருந்து நாங்கள் மீண்டுவிட்டோம்; எங்களைப் போலவே கொரோனாவிலிருந்து ஒவ்வொருவரும் மீள வேண்டும்; அதற்காக எங்களது இரத்தத்தில் உள்ள பளாஸ்மாவை தானமாக கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஒரு உயிரை வாழ வைத்தவர் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வாழ வைத்தவரைப் போலாவார் என இறைவன் சொல்லிக்காட்டுகின்றான். அந்த அடிப்படையில் எங்கள் இரத்தத்தில் உள்ள பளாஸ்மாவை தானமாகக் கொடுத்து மனித உயிர்களை காக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் சொல்லியிருப்பது மததுவேஷத்தைப் பரப்பிய சங்பரிவாரர்களுக்கு மரண அடி கொடுப்பதாக அமைந்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்….
சங்பரிவார கும்பல்களே! பாருங்கள்! இத்தகைய மனித நேயம் படைத்த இந்த சகோதரர்கள்தான்
மருத்துவமனையில் நிர்வாணமாகத் திரிந்தார்கள் என்றும், நர்சுகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என்றும் மருத்துவமனை முழுக்க கொரோனாவை பரப்ப எச்சில் துப்பி வைத்தார்கள் என்றும் அவர்கள் மீது அவதூறு பரப்புனீர்கள்? மனித மிருகங்களா? தங்களது மனிதநேய சேவைகள் மூலம் சங்பரிவாரர்களாகிய உங்கள் முகத்தில் அல்லவா அவர்கள் காரி உமிழ்ந்திருக்கின்றார்கள்.
சங் பரிவாரக் கும்பல்களே! நாளை நீங்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டாலும் மனம்திருந்தி ப்ளாஸ்மா கேட்டால் உங்களுக்கும் ப்ளாஸ்மா வழங்குவார்கள் இந்த மனிதநேயர்கள்.
(அவர்கள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன். அல்குர் ஆன் 3:54 என்ற இறைவசனம் தான் நமக்கு சட்டென நினைவுக்கு வருகின்றது.
யாரை மததுவேஷத்துடன் பார்த்து ஒதுக்கி வைத்தார்களோ அவர்களை இப்போது இறைவனின் அருளால் மகத்தானவர்களாக பார்க்கும் நிலையை அல்லாஹ் உருவாக்கிவிட்டான்.
அல்ஹம்துலில்லாஹ்…
ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்குர் ஆன் 2 : 216
நாம் சந்தித்துவரும் இந்த பிரச்சினைகளுக்குஇறைவனின் இந்த வசனம் எவ்வளவு பொருந்திப்போகின்றது.
பொருத்திருப்போம்; எல்லாம் நன்மைக்கே!
பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். அல்குர் ஆன் 2:153
"அல்ஹம்துலில்லாஹ்"
ReplyDeleteThis is The Beauty of ISLAM.
சத்தியம் வென்றது அசத்தியம் அழிந்தது
"அல்ஹம்துலில்லாஹ்"
ReplyDeleteThis is The Beauty of ISLAM.
சத்தியம் வென்றது அசத்தியம் அழிந்தது
Passed the test of Allah with the faith in Allah. Alhamthulilah.
ReplyDeleteபிழையை நியாயபடுத்த முயல்கிறவர்கள்தான் நண்பர்களை முகம் சுழிக்க வைப்பவர்கள், எதிரிகள் பலம்பெற அமுதூட்டுகிறவர்கள்.
ReplyDelete