மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - இராணுவ தளபதி
இலங்கையில் திடீரென கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கண்டுபிடிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்லது அவர்களுக்கு அருகில் பழகியவர்கள் என அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோயாளிகள் அருகில் இருந்தவர்களை தேடி செல்வதற்கு பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment